மந்த போசணையை ஒழிப்பதே தமது இலக்கு: ஜனாதிபதி

Date:

மந்த போசணையை இல்லாது ஒழிப்பதே தமது இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 9,134 அரச பாடசாலைகளிலும் 100ற்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளிலும் உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அந்த தொகை போதுமானதல்லவென அந்த சங்கங்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...