சவூதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவர் நேற்று மாலை மதீனா நகரில் இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இருபது வயதுடைய ஸீஷான் அரபாத் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையின் பேருவளை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.
இவருடைய ஜனாஸா மதீனா புனித ஜன்னத்துல் பக்கி மையவாடியில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.