இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு தப்லிக் ஜமாஅத் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு!

Date:

இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக உழைக்கின்ற இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு தப்லிக் ஜமாஅத் மர்க்கஸில் இன்று இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இப்தார் நிகழ்வில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் உட்பட ஐக்கிய பேரவையில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

இவர்களோடு தப்லிக் ஜமாஅத் மர்க்கஸின் மசூறா சபை அங்கத்தவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இஸ்லாமிய ஐக்கிய பேரவையில் முஸ்லிம் சமய கயலாசார தினைக்களம், ஸ்ரீலங்கா ஹஜ் கமிட்டி, வக்பு சபை, தரீக்காக்களின் சுப்ரிம் கவுன்சில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, அகில இலங்கை சூபி ஆன்மிக பேரவை, அகில இலங்கை தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 30 அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்தமைக்காக இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் தப்லிக் ஜமாஅத் சூறா சபைக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

 

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...