ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விவாதம் நடத்த மட்டும் நாடாளுமன்ற கூட்டத்துக்கு 13 கோடிக்கும் மேல் செலவு!

Date:

”கடந்த மூன்று ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டும் 11 விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவாதத்துக்காக 11 நாட்கள் நடைபெற்ற கூட்டத்துக்காக 13 கோடியே இருபது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே விடயம் தொடர்பில் அதிகளவான விவாதங்கள் இடம்பெற்றமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி விவாதங்கள் மே 7, 8, 10, 2019 மற்றும் மார்ச் 10, 25, 26, 2021, ஏப்ரல் 7, 8, 9 மற்றும் செப்டம்பர் 21 மற்றும் 22, 2023 ஆகிய திகதிகளில் நடைபெற்றன.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மற்றொரு மூன்று நாள் விவாதம் இந்த ஆண்டு ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய திகளில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...