உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!

Date:

எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டத்தின்படி, இந்த வருடம் பொதுத்தேர்தலே அன்றி, ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் எனவும் அதற்காகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...