ஒற்றுமைக்கான இப்தார் நிகழ்வு: ருஹுனு பல்கலைக்கழகத்தில் விசேட நிகழ்வு

Date:

‘இப்தார் அல் வஹ்தா’ -ஒற்றுமைக்கான இப்தார் நிகழ்வு இன்று (02) பிற்பகல் ருஹுனு பல்கலைக்கழக சிங்களப் பிரிவு மற்றும் முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வுக்கு பஹன மீடியா பிரைவேட் லிமிடெட், முஸ்லிம் எய்ட் அமைப்பு மற்றும் அமேசான் கல்லூரி இணைந்து இதற்கு அனுசரணை வழங்குகின்றன.

நாடுகளுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும்  வரலாற்றுச் சிறப்புமிக்க இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவும், விசேட அதிதியாக பிரதி உபவேந்தர் பேராசிரியர் இ.பி.எஸ்.சந்தனவும் கலந்துகொள்கின்றனர்.

இந்நிகழ்வின் போது ரமழான் நோன்பு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளும் முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் முக்கியமான பல கலாச்சார நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறவுள்ளன.

ருஹுணு பல்கலைக்கழக உள்ளக மண்டபத்தில் இன்று (02) மாலை 4.30 மணிக்கு இப்தார் வைபவம் ஆரம்பமாகவுள்ளதுடன், நேரடி ஒளிபரப்பு Newsnow Facebook  பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...