காத்தான்குடியில் ஏழைகளுக்கான இலவச ஆடையகம்: பிஸ்மியின் மகத்தான மனித நேயப்பணி

Date:

காத்தான்குடி பிஸ்மி இளைஞர் கழகத்தினால் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு வறுமையான குடும்பங்களுக்குரிய புதிய ஆடைகளை இலவசமாக வழங்கும் வேலை திட்டம் இந்த முறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வறுமையான 50 குடும்பங்களுக்கு இந்த புதிய ஆடைகளை வழங்கும் நிகழ்வு (3) காத்தான்குடி பிஸ்மி இடைநிலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிஸ்மி நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் தவிசாளருமான அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி அவர்களின் வழி நடாத்தலிலும் ஆலோசனையிலும் அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நழீமிஅவர்களின் தலைமையில் இந்த புதிய ஆடைகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உரிய பயனாளிகள் நேரடியாக வந்து அவர்களே ஆடைகளை தெரிவு செய்து எடுத்துச் சென்றனர்
இந்த முறை முழுமையாக புதிய ஆடைகள் வழங்கப்படுவதுடன் இதன் அடுத்த கட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளதாக இதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரி நழீமி தெரிவித்தார்.
இது தவிர இந்த ஆடைகள் கிடைக்கப் பெறாத சில குடும்பங்களுக்கு 2500 பெறுமதியான வவுச்சர்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மகத்தான பணியுடன் பிஸ்மி இடை நிலை பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அன்பளிப்புச் செய்த 800 கிலோ அரிசியும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியில் பிஸ்மி இளைஞர் கழக உறுப்பினர்கள் பிஸ்மி இடை நிலை பாடசாலை விரிவுரையாளர்கள் அதன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
எம் எஸ் எம் நூர்தீன்
காத்தான்குடி

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...