சகவாழ்வை பலப்படுத்திய மற்றொரு இரத்ததான முகாம்!

Date:

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டிருந்த இரத்தத் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கௌரவத்துக்குரிய மாதம்பாகம அஸ்ஸஜிதேரர் அவர்களின் தலைமையில் இயங்கும் தர்ம சக்தி நிறுவனமும்,கொள்ளுப்பிட்டி மஜ்ஸித் சம்மேளனமும் புத்தளம் நகர சபையுடன் இணைந்து சிறப்பான இரத்ததான முகாமை நேற்றைய தினம் புத்தளம் நகர சபை மண்டபத்தில் நடாத்தியது.

தர்மசக்தி நிறுவனத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ருமைஸ், கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் ரிஸான் மற்றும் சர்வசமய பிரமுகர்கள் உட்பட பிரதேசத்தின் சகவாழ்வு பணியில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள்இ இளைஞர்கள்என பல்வேறு தரப்பினரும் இம்முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

50 இற்கும் மேற்பட்டோர் இம்முகாமில் தமது இரத்தங்களை தானம் செய்து வைத்தியசாலையின் இரத்தத்தட்டுப்பாட்டை நீக்குவதற்காக பங்களிப்பு செய்தமையை குறித்து தர்ம சக்தியின் மாவட்ட அமைப்பாளர் திரு. ஏசி.எம். ருமைஸ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...