சஜித்துடன் இணைந்த மொட்டு உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை?

Date:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தமை தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தோர் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் சபை இணைந்து புதிய கூட்டணியை அமைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி நிறுவப்பட்டது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 05 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான

ஜி.எல். பீரிஸ், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கைச்சாத்திட்டனர். மேலும், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் இணைந்துக்கொண்டனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...