சுற்றுலா பயணிக்கு வடை, தேநீரை 800 ரூபாவுக்கு விற்றவர் நீதிமன்றில்!

Date:

களுத்துறை உணவகம் ஒன்றில் வெளிநாட்டுப் சுற்றுலா பயணி ஒருவருக்கு ‘வடையும் ஒரு சாதாரண தேநீரும்’ 800 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் இன்று (18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதற்கமைய அவர், களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றூலாப் பயணி ஒருவருக்கு குறித்த சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார். இதனையடுத்து குறித்த சுற்றுலாப் பயணி அது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் வடையை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை வழக்கு தொடர்ந்துள்ளது

பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...