ஜெருசலேமில் நெதன்யாகு அரசுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில்..!

Date:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜெருசலேமில் உள்ள இஸ்ரேல் பாராளுமன்ற கட்டிடத்தின் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இஸ்ரேல்-காசா போரில் போர் நிறுத்தம், ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் உடனடி தேர்தல் நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் 7ஆம் திகதி காஸா பகுதியில் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நடத்தப்படும் மிகப்பெரிய எதிர்ப்பு இதுவாகும்.

ஹமாஸின் தாக்குதல்களின் போது இஸ்ரேலில் பாதுகாப்பு அமைப்பில் இருந்த பலவீனம் குறித்து பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா பகுதியில் நடத்தப்பட்ட எதிர்த் தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...