தேர்தலை இலக்குவைத்து மொட்டுக்கட்சியின் புதிய வேலைத்திட்டங்கள்: பிரமாண்ட மே தினத்துக்கு ஏற்பாடு

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கீழ்மட்டத்திலிருந்து பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சியை வலுப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

”எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்கும் வகையில் கட்சி பலப்படுத்தப்படும். பொதுஜன பெரமுனவை நாட்டின் பலம் வாய்ந்த கட்சியாக தொடர்ந்தும் பேணுவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறோம்.” என்றும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்களை எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 04 முக்கிய தீர்மானங்களை அவர் தனது ‘X’ தளத்தில் இன்று புதன்கிழமை பதிவிட்டுள்ளார்.

அவை வருமாறு,

1.அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் உட்பட மாவட்ட/தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல்.

2.வெற்றிகரமான மே தினப் பேரணியை நடத்தல்

3.மே தினத்திற்குப் பின்னர் மாவட்ட மற்றும் வெளிப்புற கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தல்

4.அரசியலமைப்பு விதிமீறல்களை கண்காணிக்கும் ஒழுங்குமுறைக் குழுவைச் செயல்படுத்தல்

இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சியால் பொதுஜன பெரமுன கடுமையான பின்னடைவை சந்தித்திருந்தது.

தற்போது இவர்கள் மீண்டும் கிராம மட்டத்தில் பொதுக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். தமது மக்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரமாண்டமான மே தினக் கூட்டத்தை இம்முறை நடத்தவும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...