பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை !

Date:

பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நேற்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அறிக்கை கோரப்படும் என்றார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களின் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுச் செயற்பாட்டிற்கு குறைந்தது 19,000 அதிகாரி களும் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு 25,000 அதிகாரி களும் தேவை என அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...