பேருந்து சேவைகள் மூலம் நாளாந்தம் 25 மில்லியன் வருமானம்!

Date:

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை இடம்பெறும் பேருந்து சேவையின் மூலம் நாளாந்த வருமானம் 25 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக,கடந்த 5ம் திகதி முதல் சுமார் 200 கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு சிறப்பு போக்குவரத்து சேவையை ஆரபிக்கப்பட்டுள்ளது என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

இதேவேளை, நெடுஞ்சாலைகளின் வருமானம் நேற்று 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்றும் 15ம் திகதிக்கும் இடையில் நெடுஞ்சாலைகளின் வருமானம் கணிசமான அளவு உயர்வாகவும் சாத்தியமாகுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையில்,நீண்ட தூர புகையிரத சேவைகள் தவிர, கடந்த 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை 12 கூடுதல் புகையிரதங்கைள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி பதுளைக்கு 02 புகையிரதங்கள் பதுளையிலிருந்து கொழும்புக்கு 02 புகையிரதங்கள், காலிக்கு 02 புகையிரதங்கள், காலியிலிருந்து கொழும்புக்கு 02 புகையிரதங்கள், பெலியத்தவிற்கு 02 புகையிரதங்கள் மற்றும் பெலியத்தவிலிருந்து கொழும்புக்கு 02 புகையிரதங்கள் என இந்த புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளது

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...