பொது மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் அவசர அறிவிப்பு

Date:

ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் வீசா விண்ணப்பதாரர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிகளை வகிப்பதாகக் கூறி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடியான முறையில் பணத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் 0715308032 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத்திடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...