மலேஷியா தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிக்கு விஜயம்!

Date:

மலேஷியா தூதுவராலயத்தின் உயர் ஸ்தானிகர் பாதிழ் ஹிஷாம் பின் ஆதம் அவர்கள் புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிக்கு வெள்ளிக்கிழமை மாலை (05) சினேகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

பெரிய பள்ளியின் கட்டடக்கலை வடிவமைப்பு மற்றும் பழைமை வாய்ந்த மணிக்கூடு போன்றவற்றை பார்வையிட்டதோடு கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார்.

புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் சட்டத்தரணி இக்பால் உட்பட பெரிய பள்ளியின் நிர்வாகிகளும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் மற்றும் புத்தளம் வர்த்தக சங்க தலைவர் வை.எம்.நிஸ்தார் உட்பட இன்னும் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர்,

தன்னுடைய புத்தளத்துக்கான இவ்விஜயம் இத்துடன் நிறைவுபெறும் ஒன்றல்ல.

புத்தளத்துக்கும் மலேஷியாவுக்கும் இடையில் வர்த்தக பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை ஆரம்பிப்பதும் ஏற்றுமதி வர்த்தகத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஊக்குவிப்பதும் தன்னுடைய நோக்கமாகும்.

தொடர்ந்தும் புத்தளத்துக்கான எனது விஜயம் தொடரும் என கூறியதோடு, பள்ளியின் அபிவிருத்தி தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது மலேஷியா அரசாங்கம் ஊடாக தன்னால் முடியுமான உதவிகளை செய்ய முடியும் என்றும் கூறினார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...