முஸ்லிம்களின் ஐக்கியத்துக்காகப் பாடுபட்ட இப்ராஹிம் மௌலவியின் ஜனாஸாவில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவை பங்கேற்பு!

Date:

முஸ்லிம் உலமாக்களின் ஒற்றுமைக்காக இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பை உருவாக்கியும் பின்னர் ஐக்கியப் பேரவை ஒன்றைத் தாபிப்பதில் பெரு முயற்சியும் எடுத்த மௌலவி இப்ராஹிம் அவர்களின் ஜனாஸாவில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களான அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல் முஜீப் கபூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற அகில இலங்கை சூபி ஆன்மீக பேரவையின் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல்லாஹ் நூரி ஸுபி காதிரி உட்பட பல அங்கத்துவ அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட ஒருவரின் இறுதித் தருவாயில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காக தற்போது அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவை சார்பில் தரீக்காவின் அங்கத்தவர்கள் உட்பட பல தரப்பினரும் கலந்து கொண்டது அன்னார் முன்னெடுத்த முயற்சிகள் வெற்றிபெறுவதைக் காட்டக் கூடியதாக உள்ளதாக இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் அங்கத்தவர்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.

ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவரின் ஜனாஸாவில் கலந்து கொண்ட பேரவை அங்கத்தவர்கள் ஜமாஅத்தின் தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹியைச் சந்தித்து தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...