ஷவ்வால் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று!

Date:

ஹிஜ்ரி 1445 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை (நோன்புப் பெருநாளை) தீர்மானிக்கும் மாநாடு இன்று 09ஆம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

 

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவர் கலீபதுல் குலபா மௌலவி எம்.பி.எம் ஹிஷாம் பத்தாஹி தலைமையில் இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றவுள்ள இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ரிஸ்வி முப்தி, முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இதுதவிர, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிறைக்குழு உறுப்பினர்கள், மேமன் சங்க பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா ஷரிஆ கவுன்சில் பிரதிநிதிகள், பள்ளிவாசல் கதீப்மார்கள், பேஷ் இமாம்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிறை தென்பட்டால் பூரண ஆதாரத்துடன் 0112432110, 0112451245, 0777353789 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...