வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளத்தில் இருந்து வரும் காற்று இணையும் மண்டலத்தினால் நாட்டின் வானிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் (29) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு, தென் மாகாணங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.