இப்திகார் அஸீஸின் மறைவுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் அனுதாபம்

Date:

இலங்கை-பாகிஸ்தான் நட்புறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் இப்திகார் அஸீஸ் அவர்கள் நேற்றுக் காலமானதை முன்னிட்டு கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ் மறைந்த இப்திகார் அஸீஸின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இப்திகார் அஸீஸ், பாகிஸ்தானின் சிறந்த நண்பராக இருந்ததோடு இலங்கை-பாகிஸ்தான் நட்புறவை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றும் நினைவுகூரப்படக்கூடியவை என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அவரது சேவைகளை பாராட்டும் வகையில், பாகிஸ்தான் அரசாங்கம் 2016 செப்டம்பர் மாதத்தில் “தம்கா-இ-கித்மத்” என்ற மதிப்புமிக்க பட்டத்தை இப்திகார் அஸீஸுக்கு வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...