தலைமை நீதிபதி பதவியைத் தவிர ஏனைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க தடை விதித்து, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பு மனுவை சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மனுவை நிராகரிப்பதற்கு அரசியலமைப்பு சபை எடுத்த தீர்மானத்திற்கெதிராக சட்டத்தரணி ஒருவரால் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, குறித்த மனு மீதான விசாரணை ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.