ஒற்றுமைக்கான இப்தார் நிகழ்வு: ருஹுனு பல்கலைக்கழகத்தில் விசேட நிகழ்வு

Date:

‘இப்தார் அல் வஹ்தா’ -ஒற்றுமைக்கான இப்தார் நிகழ்வு இன்று (02) பிற்பகல் ருஹுனு பல்கலைக்கழக சிங்களப் பிரிவு மற்றும் முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வுக்கு பஹன மீடியா பிரைவேட் லிமிடெட், முஸ்லிம் எய்ட் அமைப்பு மற்றும் அமேசான் கல்லூரி இணைந்து இதற்கு அனுசரணை வழங்குகின்றன.

நாடுகளுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும்  வரலாற்றுச் சிறப்புமிக்க இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக ருஹுனு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவும், விசேட அதிதியாக பிரதி உபவேந்தர் பேராசிரியர் இ.பி.எஸ்.சந்தனவும் கலந்துகொள்கின்றனர்.

இந்நிகழ்வின் போது ரமழான் நோன்பு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளும் முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் முக்கியமான பல கலாச்சார நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறவுள்ளன.

ருஹுணு பல்கலைக்கழக உள்ளக மண்டபத்தில் இன்று (02) மாலை 4.30 மணிக்கு இப்தார் வைபவம் ஆரம்பமாகவுள்ளதுடன், நேரடி ஒளிபரப்பு Newsnow Facebook  பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...