காத்தான்குடியில் ஏழைகளுக்கான இலவச ஆடையகம்: பிஸ்மியின் மகத்தான மனித நேயப்பணி

Date:

காத்தான்குடி பிஸ்மி இளைஞர் கழகத்தினால் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு வறுமையான குடும்பங்களுக்குரிய புதிய ஆடைகளை இலவசமாக வழங்கும் வேலை திட்டம் இந்த முறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வறுமையான 50 குடும்பங்களுக்கு இந்த புதிய ஆடைகளை வழங்கும் நிகழ்வு (3) காத்தான்குடி பிஸ்மி இடைநிலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிஸ்மி நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் தவிசாளருமான அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி அவர்களின் வழி நடாத்தலிலும் ஆலோசனையிலும் அதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நழீமிஅவர்களின் தலைமையில் இந்த புதிய ஆடைகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உரிய பயனாளிகள் நேரடியாக வந்து அவர்களே ஆடைகளை தெரிவு செய்து எடுத்துச் சென்றனர்
இந்த முறை முழுமையாக புதிய ஆடைகள் வழங்கப்படுவதுடன் இதன் அடுத்த கட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளதாக இதன் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரி நழீமி தெரிவித்தார்.
இது தவிர இந்த ஆடைகள் கிடைக்கப் பெறாத சில குடும்பங்களுக்கு 2500 பெறுமதியான வவுச்சர்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மகத்தான பணியுடன் பிஸ்மி இடை நிலை பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அன்பளிப்புச் செய்த 800 கிலோ அரிசியும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியில் பிஸ்மி இளைஞர் கழக உறுப்பினர்கள் பிஸ்மி இடை நிலை பாடசாலை விரிவுரையாளர்கள் அதன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
எம் எஸ் எம் நூர்தீன்
காத்தான்குடி

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...