குமார தர்மசேனவுக்கு எதிராக முறைப்பாடு!

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேனவினால் நடத்தப்படும் பயிர்ச்செய்கை திட்டத்திற்கு மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இல்லை என ‘என்மூலம் நாட்டுக்கு அபிவிருத்தி’ என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த பயிர்ச்செய்கை திட்டத்தில் முதலீடு செய்வதற்காக மக்களிடம் இருந்து பண வைப்புகளை பெற்றுக்கொள்கின்றனர் என அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்த, இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிறுவனம் மக்களை தவறாக வழிநடத்தி பண வைப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும், மத்திய வங்கியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர் கோரியுள்ளார்.

‘அகர்வுட்’ எனப்படும் குமார தர்மசேனவினால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம் தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

என்றாலும், இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றதென குமார தர்மசேன, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

”தமது நிறுவனத்தின் தயாரிப்புகள் நாட்டின் சட்டங்களின்படி மேற்கொள்ளப்படுகின்றன. சட்டவிரோத வர்த்தகம் எனக் கூறப்படும் ஊடகச் செய்திகள் சேறு பூசும் பிரச்சாரம். விவசாயம் சட்ட விதிகளின்படி நடத்தப்படுகிறது” என்றும் குமார தர்மசேன தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...