தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கிய ஈராக்

Date:

ஒரு பால் உறவுக்கு 10 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அதனை குற்றமாக்கும் சட்டமூலம் ஒன்று ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களும் ஒன்று தொடக்கம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சாரத்தை ஊக்குவிப்பவர்களுக்கு குறைந்தது ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

இது நாட்டின் மதப் பெறுமானங்களை உறுதிப் படுத்துவதாக உள்ளது என்று இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஈராக்கிற்கு கறுப்புப் புள்ளியாக உள்ளது என்று உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு மிகப்பெரிய கூட்டணியைக் கொண்டுள்ள பழைமைவாத ஷியா முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இதில் ஒருபாலுறவுக்கு மரண தண்டனை விதிக்க ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டபோதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பை அடுத்து அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...