பண்டிகையின் போது கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடு!

Date:

ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க விசேட ஏற்பாடு செய்யப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

சிறையில் உள்ள இஸ்லாமிய மத கைதிகளை ரமழான் பண்டிகை தினமான 11ம் திகதி உறவினர்கள் சந்திக்க முடியும். 12, 13 ஆம் திகதிகளில் ஏனைய கைதிகளை உறவினர்கள் சந்திக்க முடியும்.

தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை மாத்திரம் கைதிகளுக்கு உறவினர்கள் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...