புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய இடைக்கால நிர்வாக சபை, வக்பு சபையால் நியமனம்

Date:

நீண்ட காலமாக வெற்றிடமாக உள்ள புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான நம்பிக்கையாளர் சபையை தெரிவு செய்யும் வகையில் இடைக்கால நிர்வாக சபையொன்றை வக்பு சபை நியமித்துள்ளது.

இதற்கான நியமன கடிதங்களை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வழங்கி வைத்தார்.

இக்குழுவின் அங்கத்தவர்களாக பின்வருவோர் இடம்பெறுகின்றார்கள்.

தொழிலதிபர் எம்.டீ ருஹுல் ஹக், சட்டத்தரணி எம்.ஏ.எம். அஸீம், அஷ்ஷெய்க் . எச்.எம். மின்ஹாஜ், (இஸ்லாஹி), ஆசிரிய ஆலோசகர் ஏ.டீ.எம். நிஜாம், அஷ்ஷெய்க் எம்.எம்.முஹ்சீன், கிராமசேவகர்களான என்.எம். ரிஸ்மி, எம்.எப்.எம் முஜாஹித், வர்த்தக சங்கத்தலைவர் வை.எம்.நிஸ்தார், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் இரண்டரை மாத கால இடைவெளியில் பள்ளிவாசலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபையை தெரிவு செய்வது அவசியம் என முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அலா அஹமத் ‘நியூஸ் நவ்’ க்குத் தெரிவித்தார்.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் புத்தளம் பிரதேசத்தில் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...