மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழு சிக்கி தவிப்பு!

Date:

இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழுவொன்று துபாயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று இரவு முதல் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதனால் பல நாடுகளின் வான் பரப்புகள் மூடப்பட்டன. இஸ்ரேல் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கிடைத்த தகவலையடுத்து, இலங்கையர்கள் உள்ளிட்ட பயணிகளுடன் சென்ற விமானம் துபாய்க்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

சில இலங்கை பயணிகளுடன் வந்த குறித்த விமானம் துபாய்க்கு திருப்பி விடப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் விமான தாமதங்கள் இருப்பதாகவும், விமான அட்டவணையில் சாத்தியமான மாற்றங்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...