மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ள அரிசி தரமற்றது என குற்றச்சாட்டு!

Date:

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக வெயாங்கொடை அரச உணவு களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியே தரமற்றது என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது

பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் இந்த அரிசித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...