நடைபெற்று முடிந்த மாலைதீவின் 20 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த தேர்தலில் ஜனாதிபதி முய்சுவின் கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் மொத்தமுள்ள 93 தொகுதிகளில் 66 இடங்களை வென்றுள்ளது.
இது நாடாளுமன்றத்தில் 3-இல் 2 பங்காகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயற்பாடுகளை அதிகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தலுக்கு முன்பு முய்சுவின் பிஎன்சி கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே வெறும் 8 எம்பிக்கள் மட்டுமே இருந்தார்கள். இதனால் அவரால் விரும்பிய சட்டங்களை எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.
முகம்மது முய்சு எதாவது சட்டத்தைக் கொண்டு வர முயன்றால் நாடாளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டு வந்தது.
தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துள்ளதால், முகம்மது முய்சு நினைத்த சட்டங்களை நிறைவேற்ற முடியும்.