மாலைத்தீவில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: உற்றுநோக்கும் இந்தியா

Date:

மாலைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பமாகின.

மாலைத்தீவில்  93 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17 ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டது.

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் அனுமதியளித்தையடுத்து இன்று தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்து.

சீன ஆதரவாளர் என கூறப்படும் தற்போதைய மாலைத்தீவு ஜனாதிபதியான முகமது மூயிஸ் இந்தியாவுடன் சுமுகமான உறவை கொண்டிராதவர்.

“தான் ஆட்சிக்கு வந்தால் மாலைத்தீவில் இருந்து இந்திய இராணுவ வீரர்களை விரட்டியடிப்பேன்” என தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர் கூறியிருக்கின்றார்.

இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூபிப்பதற்கான முக்கிய சோதனையாக பார்க்கப்படுகிறது.

மாலைத்தீவு புவிசார் அரசியலில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. முய்சு அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மாலைத்தீவுக்கு உதவ அங்கிருந்த இந்தியா ராணுவத்தினரையும் வெளியேற உத்தரவிட்டார். அதேநேரம் மறுபுறம் அங்கே சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.

மாலைத்தீவில் உள்ள பல முக்கிய திட்டங்களில் சீனா மிகப் பெரியளவில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன. இதனால் மாலைத்தீவு தேர்தல் ரொம்பவே முக்கியமாக மாறுகிறது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...