முஸ்லிம்களின் ஐக்கியத்துக்காகப் பாடுபட்ட இப்ராஹிம் மௌலவியின் ஜனாஸாவில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவை பங்கேற்பு!

Date:

முஸ்லிம் உலமாக்களின் ஒற்றுமைக்காக இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பை உருவாக்கியும் பின்னர் ஐக்கியப் பேரவை ஒன்றைத் தாபிப்பதில் பெரு முயற்சியும் எடுத்த மௌலவி இப்ராஹிம் அவர்களின் ஜனாஸாவில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களான அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல் முஜீப் கபூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற அகில இலங்கை சூபி ஆன்மீக பேரவையின் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல்லாஹ் நூரி ஸுபி காதிரி உட்பட பல அங்கத்துவ அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட ஒருவரின் இறுதித் தருவாயில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காக தற்போது அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவை சார்பில் தரீக்காவின் அங்கத்தவர்கள் உட்பட பல தரப்பினரும் கலந்து கொண்டது அன்னார் முன்னெடுத்த முயற்சிகள் வெற்றிபெறுவதைக் காட்டக் கூடியதாக உள்ளதாக இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் அங்கத்தவர்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.

ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவரின் ஜனாஸாவில் கலந்து கொண்ட பேரவை அங்கத்தவர்கள் ஜமாஅத்தின் தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹியைச் சந்தித்து தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...