முஸ்லிம்கள் தொடர்பில் சர்ச்சை கருத்து: மீண்டும் இனவாதத்தை கக்கும் அத்துரலியே ரத்தன தேரர்:

Date:

முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கூறியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் மசிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை வெளியான அந்த நாளிதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியில் அத்துரலியே தேரர், கூறியிருப்பது இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தைச் சந்தேகக் கண்ணோட்டத்தில் அவதானிக்கிறாா் என்பதை அறிய முடிகின்றது.

மதரசா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் இஸ்லாமியப் பாடநெறிகளை தேரர் முஸ்லிம் அடிப்படைவாதக் கல்வியாகவும் அக் கல்வி பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் துணை போகலாம் என்ற தொனியிலும் கூறியிருக்கிறார்.

மேலும் நாட்டில் பல இடங்களில் அடிப்படைவாத பாடசாலைகள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் நாம் அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான கல்வியை வழங்குபவர்கள் யார்? சலுகைகளை வழங்குவது யார்? என்பது தொடர்பில் நாம் ஆராய வேண்டும்‘

பின்புலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச நிலைமையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை செய்தவர் கோட்டாபய ராஜபக்ச என வேடிக்கை கதைகளை கூறுவதில் பயனில்லை. எங்களுடைய நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் சிங்கள மக்களுடனே இருக்கிறார்கள்.

இவ்வாறான விடயங்களை நிறுத்த வேண்டுமானால் ஒழுங்கான கல்விக் கொள்கைகளை நாட்டில் உருவாக்க வேண்டும்.

சஹரான் போன்றவர்களால் குண்டுத் தாக்குதல் நடத்த முடியுமெனில் ஏனையோர்களாலும் இதனை செய்ய முடியும்.

ஆகவே இலங்கையிலிருந்து முஸ்லிம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

நாம் ஒருபோதும் இனவாதத்தை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டதில்லை. அதேநேரம் கத்தோலிக்க சபையை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையான தகவல்களை வழங்கிய நிலந்த ஜயவர்தன இன்று குற்றவாளியாகியாக மாற்றப்பட்டிருக்கிறார்.

எங்களுக்கு சமாதானம் தேவை. ஆகவே, இந்த முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் பயங்கரமானது என்று தேரர் கூறியிருக்கிறார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...