ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு!

Date:

ஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று  இடம்பெற்றுள்ளது

அங்கு அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம், அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் சகல தொகுதிகளுக்கும் அபிவிருத்தி திட்டங்களை தயாரித்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் குறிப்பிட்ட இணக்கப்பாடுகளை எட்டுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...