இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு தப்லிக் ஜமாஅத் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு!

Date:

இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக உழைக்கின்ற இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு தப்லிக் ஜமாஅத் மர்க்கஸில் இன்று இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இப்தார் நிகழ்வில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் உட்பட ஐக்கிய பேரவையில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

இவர்களோடு தப்லிக் ஜமாஅத் மர்க்கஸின் மசூறா சபை அங்கத்தவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இஸ்லாமிய ஐக்கிய பேரவையில் முஸ்லிம் சமய கயலாசார தினைக்களம், ஸ்ரீலங்கா ஹஜ் கமிட்டி, வக்பு சபை, தரீக்காக்களின் சுப்ரிம் கவுன்சில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, அகில இலங்கை சூபி ஆன்மிக பேரவை, அகில இலங்கை தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 30 அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்தமைக்காக இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் தப்லிக் ஜமாஅத் சூறா சபைக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...