சகவாழ்வை பலப்படுத்திய மற்றொரு இரத்ததான முகாம்!

Date:

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டிருந்த இரத்தத் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கௌரவத்துக்குரிய மாதம்பாகம அஸ்ஸஜிதேரர் அவர்களின் தலைமையில் இயங்கும் தர்ம சக்தி நிறுவனமும்,கொள்ளுப்பிட்டி மஜ்ஸித் சம்மேளனமும் புத்தளம் நகர சபையுடன் இணைந்து சிறப்பான இரத்ததான முகாமை நேற்றைய தினம் புத்தளம் நகர சபை மண்டபத்தில் நடாத்தியது.

தர்மசக்தி நிறுவனத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ருமைஸ், கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் ரிஸான் மற்றும் சர்வசமய பிரமுகர்கள் உட்பட பிரதேசத்தின் சகவாழ்வு பணியில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள்இ இளைஞர்கள்என பல்வேறு தரப்பினரும் இம்முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

50 இற்கும் மேற்பட்டோர் இம்முகாமில் தமது இரத்தங்களை தானம் செய்து வைத்தியசாலையின் இரத்தத்தட்டுப்பாட்டை நீக்குவதற்காக பங்களிப்பு செய்தமையை குறித்து தர்ம சக்தியின் மாவட்ட அமைப்பாளர் திரு. ஏசி.எம். ருமைஸ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...