சஜித்-அனுர விவாதம்: விவாத திகதியை நிராகரித்த சஜித்: புதிய திகதி அறிவிப்பு

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள திகதி குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பதிலளித்துள்ளது.

அடுத்த மாதம் 7, 9, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதென நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களுக்கும் தாம் தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசவும் நேற்றைய தினமே பதிலளித்திருந்தார்.

தேசிய மக்கள் சக்திக்கு பதிலளித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தி, இரு கட்சிகளின் பொருளாதார கலந்துரையாடல்களுக்கு முன்னர் பொது விவாதம் ஒன்றையும் முன்மொழிந்துள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு பொது விவாதங்களுக்கான திகதிகளாக எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளை பரிந்துரைத்துள்ளது.

இதற்கமைய தேசிய மக்கள் சக்தி அறிவித்த திகதிகளுடன் குறித்த தினங்கள் பொருந்தாதுள்ளன.

இரு கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதத்திற்கு மாத்திரமே திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி, பொருளாதார வல்லுநர்களுக்கிடையிலான விவாதத்திற்கு திகதிகள் முன்மொழியப்படாமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...