சர்வதேச அல்-குத்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Date:

கடந்த 45 வருடங்களாக  அனுஷ்டிக்கப்பட்டு வரும் “பைத்துல் முகத்தஸ்” தினம் ரமழானின் இறுதி வெள்ளிக்கிழமையான இன்று (05)  புத்தளத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

புத்தளம் முஹியத்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளியில் ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததும் இந்நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது பலஸ்தீனுக்கு ஆதரவாக பொது மக்கள் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

சமூக ஆர்வலர் இப்லால் அமீன், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜௌபர் மரிக்கார் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

பெருமளவிலான பொலிஸார் பெரிய பள்ளிக்கு முன்பாக குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்ட பேரணிக்கும் ஒலி பெருக்கி பாவனைக்கும் பொலிஸார் தடை விதித்திருந்தனர்.

இறுதியாக டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், இப்லால் அமீன் ஆகியோரது உணர்வு பூர்வமாக உரையினை தொடர்ந்து அமைதியான இந்த ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...