பேலியகொடை மீன் சந்தை எதிர்வரும் 13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
பேலியகொடை மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டின் போது மக்களின் நலன் கருதி பேலியகொடை மீன் சந்தை இவ்வாறு திறக்கப்படும். போதியளவு மீன் கையிருப்பு உள்ளதாகவும், விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.