பண்டிகையின் போது கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடு!

Date:

ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க விசேட ஏற்பாடு செய்யப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

சிறையில் உள்ள இஸ்லாமிய மத கைதிகளை ரமழான் பண்டிகை தினமான 11ம் திகதி உறவினர்கள் சந்திக்க முடியும். 12, 13 ஆம் திகதிகளில் ஏனைய கைதிகளை உறவினர்கள் சந்திக்க முடியும்.

தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை மாத்திரம் கைதிகளுக்கு உறவினர்கள் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...