பிரபல சிங்கள நடிகை தமிதா மற்றும் அவரது கணவர் கைது

Date:

 

கொரியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சுமார் முப்பது அதிகாரிகள் கொண்ட பொலிஸ் படையொன்று கோட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 2ஆம் திகதி, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் இவர்களை கைது செய்வதை தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...