புத்தாண்டை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை

Date:

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசியை பகிர்ந்தளிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக 20,000 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நலன்புரி மற்றும் ஏனைய உதவிகள் எதுவும் கிடைக்காத குடும்பங்களுக்கே இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து,நலன்புரி திட்டத்தின் கீழ், சுமார் 2.4 மில்லியன் குடும்பங்களுக்கு வருகின்ற ஜூலை மாதத்துக்குள் பல நன்மைகள் பெற்றுத்தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளினால், மீட்டெடுக்க சுமார் பதினைந்து வருடங்களாகும்.

எனவே, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என அனுராதபுரத்தில் நடந்த ஊடகச் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...