போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவ நிலையங்கள் தொடர்பாக அவசர விசாரணை..!

Date:

போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவ நிலையங்கள் தொடர்பாக அவசரமாக விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய இந் நடவடிக்கையை எடுத்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மருத்துவ சபையில் மருத்துவர்கள் பதிவு செய்திருக்க வேண்டுமென்பதுடன், மாகாண மட்டத்தில் தனியார் மருத்துவ நிறுவனங்கள் பதிவு செய்தல் கட்டாயமாகும்.

ஆயினும் நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்படாத பல மருத்துவர்களும் மருத்துவ நிறுவனங்களும் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இவ்வாறான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை தேடிக் கண்டுபிடித்து விசாரணை நடத்த மாகாண மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பணித்த சுகாதார அமைச்சு, போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தது.

போலி மருத்துவர்கள் தொடர்பாக தம்மிடம் தகவல் வழங்க முடியுமென்றும் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...