‘மஹிந்த வெற்றிபெறாவிட்டால் தன்னைத்தானே சுட்டுக் கொள்வேன்’: பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார்!

Date:

இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார (63) காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (22) காலை காலமானார்.

கடந்த காலங்களில் அரசியல் கள நிலவரங்களை எதிர்வுகூறுவதில் ஜோதிடர் சந்திரசிறி பண்டார சர்ச்சைகளுக்குள்ளாக்கப்பட்டிருந்தார்.

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ‘இருதின’ என்ற சிங்கள பத்திரிகையில் சந்திரசிறி பண்டார தொடர்ந்தும் எழுதி வந்துள்ளார். அதேவேளையில் தனியார் தொலைக்காட்சிலும் அவரது நிகழ்ச்சி ஒன்று தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்த சில கருத்துக்கள் மற்றும் எதிர்வுகூறல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறையாலும் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியடைவதாகக் கணித்து அது நடக்கவில்லை என்றால் தன்னைத் தானே சுட்டுக் கொள்வதாக அறிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறாவிட்டால், பொதுவெளியில் சுட்டுக் கொள்வேன்  எனவும் ஜாதகம் பார்ப்பதை நிறுத்துவதாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.

எனினும், ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதால், அவரது கணிப்பு குறித்தும், தன்னைத் தானே தலையில் சுட்டுக்கொள்ளும் சவால் குறித்தும் பலரும் விசாரிக்கத் தொடங்கினர்.

அதன்பின்பு பார்வையாளர்கள் மத்தியில் அபிப்பிராயத்தை ஏற்படுத்தவே இவ்வாறான கருத்தை வெளியிட்டதாகவும்  இந்த கணிப்புகள் 100% துல்லியமானவை அல்ல எனவும் தெரிவித்திருந்தார் இதுதொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கும் கேலிக்குள்ளாக்கப்பட்டிருந்தார்.

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...