முஸ்லிம்களின் ஐக்கியத்துக்காகப் பாடுபட்ட இப்ராஹிம் மௌலவியின் ஜனாஸாவில் இஸ்லாமிய ஐக்கியப் பேரவை பங்கேற்பு!

Date:

முஸ்லிம் உலமாக்களின் ஒற்றுமைக்காக இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பை உருவாக்கியும் பின்னர் ஐக்கியப் பேரவை ஒன்றைத் தாபிப்பதில் பெரு முயற்சியும் எடுத்த மௌலவி இப்ராஹிம் அவர்களின் ஜனாஸாவில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்களான அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி, அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல் முஜீப் கபூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற அகில இலங்கை சூபி ஆன்மீக பேரவையின் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க்ஹ் அப்துல்லாஹ் நூரி ஸுபி காதிரி உட்பட பல அங்கத்துவ அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட ஒருவரின் இறுதித் தருவாயில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்காக தற்போது அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவை சார்பில் தரீக்காவின் அங்கத்தவர்கள் உட்பட பல தரப்பினரும் கலந்து கொண்டது அன்னார் முன்னெடுத்த முயற்சிகள் வெற்றிபெறுவதைக் காட்டக் கூடியதாக உள்ளதாக இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் அங்கத்தவர்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.

ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவரின் ஜனாஸாவில் கலந்து கொண்ட பேரவை அங்கத்தவர்கள் ஜமாஅத்தின் தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹியைச் சந்தித்து தமது அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...