அமெரிக்க ஆதரவு தேவையில்லை: தனித்துப் போரிடுவோம் : இஸ்ரேல் பிரதமர்!

Date:

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவின்றித் தனித்துப் போரிடத் தயார் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

ஆயுத விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக இஸ்ரேலியப் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இன்று நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம், நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம், எங்கள் எதிரியையும் நம்மை அழிக்க முயல்பவர்களையும் தோற்கடிக்க நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்… தேவைப்பட்டால், நாங்கள் எங்கள் விரல் நகங்களால் போராடுவோம்.

தெற்கு காஸாவில் அமைந்த ராபா நகரில் தரைவழித் தாக்குதலைத் ஆரம்பித்தால், இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை ராபா மீதான தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் தம்மிடம் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...