இம்ரான் கானுக்கு பிணை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

Date:

நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (15) அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் வழக்கறிஞர் அவருக்குப் பிணை வழங்கப்படுவதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் மேலும் இரு வழக்குகளுக்கான தண்டனையாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரென அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அவர் நான்கு வழக்குகளில் குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இரு வழக்குகளில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் முதல் பல்வேறு பல்வேறு வழக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டு உட்பட பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...