இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய வர்த்தகருக்கு பிணை!

Date:

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட வர்த்தகரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான வர்த்தகர் இன்று (22) புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இவர் கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரபல வர்த்தக வளாகமொன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இலங்கைக்கான ஈரான் தூதுவரான அலிரேசா டெல்கோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...