இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஒரே இரவில் 24 பேர் பலி

Date:

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே இரவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன் தினமும் இஸ்ரேலிய இராணுவம் ஷெல் தாக்குதல் மேற்கொண்டது.

இதன்போது 10 குழந்தைகள் உட்பட 16 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் நேற்று வியாழக்கிழமை மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் வீடொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 08 பேர் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளை இலக்கு வைத்து காசா பகுதி முழுவதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...