உண்மை மற்றும் நல்லிணக்க திட்டம் இலங்கையில் செயற்படுவது அவசியம்: அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு

Date:

இலங்கையில் செயற்படும் உண்மை மற்றும் நல்லிணக்க திட்டமொன்று காணப்படுவது அவசியம் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர்  டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.

அதேநேரம்  எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெறும் தலைவர்கள்  இதனை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா அபிவிருத்தி சகாவாக விளங்குவதற்கு தயார் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி ஆலோசனை மற்றும் கடனை வழங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு உறவுகளை இலங்கை தொடர்ந்தும் வலுப்படுத்தவேண்டும் என அமெரிக்கா ஊக்குவிக்கின்றது ஆரோக்கியமான போட்டிதன்மையை பேணுவதற்கு வெளிநாட்டு தரப்புகள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு இலங்கை வாய்ப்புகளை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகளை பொதுமக்களிற்கு வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...